ஒரு கொலை நடந்தால் ஒன்று கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாக இருக்கலாம். அல்லது கொலையாளி உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். அல்லது இது போன்ற கொலைகள் இனி நடக்காமல் இருக்க முடிந்ததை செய்யலாம்.
ஆனால் இவை எதையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பகிரங்கமாக ஒரு பொய்யை சொல்லி அதன் மூலம் ஒரு சமுதாயத்தின் மேல் பழியை சுமத்தி மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை வளர்த்து அதில் குளிர்காய நினைப்பது எத்தனை கேவலமான செயல்.
இந்த செயலை வேறு ஒரு அரசியல் கட்சி தலைவர் செய்திருந்தால் இந்நேரம் தமிழக காவல்துறை பொங்கி எழுந்திருந்திருக்கும்.
ஆனால் இவாளெல்லாம் தமிழக முதல்வரோடு அந்த காலத்திலேயே ஒன்றாக நாடகம் போட்ட ஆட்களாச்சே. நெருங்க முடியுமா?

0 Comment to "ygee மகேந்திரன்-க்கு குற்றாவளியை தெரியுமா? "
Post a Comment