Tuesday, 28 June 2016

வீரப்பன் யாருக்கு வில்லாதி வில்லன்!


இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக பெரும்பான்மையோடு நாடாளுமன்றம் சென்றாலும் திராவிட கட்சி தமிழரின் உரிமையை மீட்க உதவாது. 

இந்திய கூட்டாட்சிக்கு உட்பட்ட மாநிலமானாலும் தமிழர் எதிர்ப்பு இனவாத அரசியலை முன்வைத்தே கர்நாடகம் ஆந்திரம் கேரளம் என எல்லா அண்டை மாநிலங்களும் இந்தியத்தால் நகர்த்தப்படுகிறது. 

இந்திய காலனிய ஏகாதிபத்தியம் தேசிய இனங்களின்-உரிமை மறுப்பில் தான் சுரண்டி திழைத்து வளர்கிறது. தமிழர் இனம் தான் வலிமையான சர்வாதிகார எதிர்ப்பை தேசிய இன உரிமையாய் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரை நூற்றாண்டில் வல்லாதிக்கத்திற்கு எதிராய் மிகவும் கடுமையாக போராடிய இனம் தமிழர் இனம் தான், சிறுபான்மை தமிழர் இனம். ஆம் பெருப்பான்மை தமிழினம் இந்திய மற்றும் திராவிட கருத்தியலாலும் மேலும் மீதமுள்ள மக்கள் அறியாமையாலும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போராடுவதே கடினமான நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், மேலும் அவர்கள் விழித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள மது கொள்கை நுகர்வு பொருளாதார கொள்கை, அந்நிய நேரடி முதலீடு, கார்பரேடில் வேலை வாய்ப்பு என்று அறிவுக்கூலிகளாக்கப்பட்டும் மேல் மட்டம் முதல் அடி மட்டம் வரை அடிமைதனத்தில் வைத்திருக்கும் ஒரு கட்டமைப்பு.. இதனை முன்னின்று செய்வது திராவிட கட்சிகள், பின்னின்று இயக்குவது ஏகாதியபத்திய நாடுகளும் அதன் ஏவலாளான இந்தியாவும். 

இப்படி ஒரு பக்கம் நம் இனம் ஆங்கிலத்தில் மோகம் கொண்டு நம் நாட்டு வளங்களை பொருளாதாரத்தை உரிஞ்சும் அந்நிய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு சேவை செய்து அதில் பெருமையடைய, நாட்டை அழிக்கும் அழிவு திட்டங்களை முன்னேற்றம் என்று பிதற்ற, 'தமிழர் தான் ஆள வேண்டும் என்பது இனவாதம்' என்று கூறி திராவிட தரகர்களை ஆளவிடுவதும், என்று ஒரு கூட்டம் மந்தைகளை போல் வாழ்ந்தாலும். இதே இனம் இந்திக்கு எதிராய் சுதந்திரத்திற்கு மின்பும் பின்பும் பெரும் போரையே முன்னெடுத்தது!!

இந்த போர் தமிழர் இனத்தின் இருப்பை காட்டியதோடு, ஏனைய தேசிய இனங்களுக்கும் உணர்வூட்டியது, அரசியல் சட்டத்தை மாற்றியமைத்து இந்தி கொள்கையில் தமிழகத்திற்கு தனிசிறப்பு விலக்கு அழித்தது இந்தியா.ஈழத்தில் வல்லாதிக்க கிழக்காசிய நாடுகளை எதிர்த்து தமிழர்கான நாடு அடைந்து, 

தற்சார்பு பொருளாதார, பெண்ணிய, சமத்துவ விடுதலையடைந்து தற்காப்பு போர்புரிந்துகொண்டு ஒரு அரசாங்கத்தை நிறுவி அடிமைப்பட்ட தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாய் விழங்கியது விடுதலை புலிகள் தலைமையிலான தமிழீழம். இப்படியான நம் இனத்தின் நகர்வுகளால் நம்மை கண்கானித்து நமக்கு வலைவிரிக்கப்பட்டது. 

இந்த போர் குணத்தை காத்து இதன் தொடர்சியாய் நம் உரிமைகளை மீட்டவிடாமல், இதன் வழி செல்லவிடாமல் திசைமாற்றியது இரு திராவிட கட்சிகளும் தான். 

நம் பல தலைவர்கள் இந்தியத்தையும் திராவிடத்தையும் அதன் உண்மை தன்மையையும் அன்றே உணர்ந்து இந்திய விடுதலைக்கு முன்பே தனி தமிழ் நாடு கோரினர் தமிழ் தேசியத்தை முன்வைத்தனர். 

திராவிடத்தால் அது இருட்டடிப்பு செய்யப்பட்டது, குறைந்தபட்ச 'தமிழர் பிரதிநிதித்துவம்' 'தமிழ்நாட்டை தமிழ் மண்ணின் மைந்தன் தமிழரே ஆள்வது' என்ற அளவில் கூட விடாமல் திராவிடம் பார்த்துக்கொண்டது. தமிழர் இனத்தின் தேசிய இன உரிமை மீட்பு போராட்டங்களும், தமிழரை பகை இனமாக கருதும் இனத்திடம் நம் ஆட்சி சென்றதால் மேலும் சுலபம் ஆகியது தமிழரை சிதைக்க.

ஒரு பக்கம் அண்டை மாநிலத்தின் இனவாத கழ்ப்புணர்ச்சியால் தமிழர் உரிமை மறுப்பு வஞ்சிப்பு இன்னொரு பக்கம் சொந்த மாநிலத்தின் அயலார் ஆட்சியின் அலட்சியம், 

காலத்தின் கட்டாயமாய் 'தன் ஊர் பெண்களுக்கு நிழந்த கொடுமைகளுக்காய்' , 'தன் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காய்' வீரப்பன் ஆயுதமேந்தினான்.
ஆட்சியைபிடித்து அதிகாரத்தை வைத்திருக்கும் அரசாங்கம் தமிழருக்கான அரசாங்கமாக இல்லாததால் தன் துப்பாக்கி முனையில் நிபந்தனைகளை வைத்தான், இரு மாநில அரசாங்கத்தையும் அடிபணியவைத்தான். 

திராவிட அரசு பதறியது!
கர்நாடகமோ கதிகலங்கியது!!
இப்படி ஒடுக்கப்படும் இனத்தில் அவதரிக்கும், அநீதியை சகித்துக்கொள்ள முடியாதவனின் கிளர்ச்சி மேலாதிக்கத்தை தரைமட்டமாக்கும், 
அப்படி மண்டியிட்ட மேலாதிக்கத்தின் ஆற்றாமை தான் வரலாற்று திரிபு. 
ஒரு விடுதலை போராட்டத்தை தவறாக பதிவு செய்தலில் அற்பசுகம் மட்டும் அடங்கிவிடுவதில்லை, 

வரலாறு ஆயுதமாய் மாறும் என்று உணர்ந்து அந்த ஆயுதத்தை மழுங்க செய்யும் வேலை அது.

வீரப்பன் காலத்தில் இருந்த ஆட்டு மந்தை கூட்டம் வீரப்பனை பயங்கரவாதியாக மட்டுமே பார்த்திருக்கும். அந்த வீரப்பனின் நிபந்தனைகளை கூட அறிந்திருக்க மாட்டார்கள் அவர்கள். சட்டம் இருக்கிறது நீதிமன்றம் இருக்கிறது அரசாங்கம் இருக்கிறது என்றெல்லாம் வாய்விரித்திருக்கும் அந்த கூட்டம். 

"அட ஆட்டு மந்தை கூட்டமே, 
உன் சட்டத்தை நீதிமன்றத்தை அரசாங்கத்தை வைத்து காவிரியை மீட்க முடிந்ததா? 

இல்லை தானே??
இன்றும் வீரப்பனுக்கான தேவை உள்ளது தானே???
அப்படியானால் வீரப்பன் யாருக்கு வில்லன்????
அந்த மேலாதிக்க இனவாத்திற்கு வில்லன்!!! 
அதே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வில்லாதி வில்லன்களாவோம்... "
என்று வீர முழக்கமிட வாய்புள்ளதால் 'வில்லாதி வில்லன் வீரப்பன்' என்று படத்தை தயாரித்து வெளியிடுகிறது.

Share this

0 Comment to "வீரப்பன் யாருக்கு வில்லாதி வில்லன்!"

Post a Comment