Tuesday, 28 June 2016

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வழி என்ன ?


போனவருடம் எப்படியாவது ஜல்லிக்கட்டை நடத்தி முடிக்க தீர்மானித்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம். திட்டமிட்டபடி மதுரையில் நடத்த முகாமிட்டுருந்தோம். காலையில் அண்ணன் தங்கி இருந்த விடுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த சென்றபோது இடைமறித்து காவல்துறை கைது செய்தது. சரி ஒருபக்கம் கைது இருக்கட்டும் மறுபக்கம் காளையை அடைத்துவிடும் என காளை வைத்து இருப்போரை அனுக அவர்கள் காவல்துறைக்கு பயந்து எங்களோடு ஒத்துழைக்கவில்லை.

அன்றே நானும் கரூர் மண்டல செயலாளர் ரமேஷ் ( Ramesh Ramesh )அவர்களும் முடிவு செய்து காளையை நாமே வாங்கி வளர்ப்போம். அந்த காளைகள் வீரத்தமிழர் முன்னணி சார்பாக வளரும். வரும் தைப்பொங்கலில் நமது காளைகளை நாமே வளர்த்து வாடிவாசல் அமைத்து திறப்போம் என்று. அதன்படி இன்னும் ஒருவாரத்திற்குள் இருவரும் 3 காளைகளை வாங்கி வீரத்தமிழர் முன்னணி சார்பாக திட்டமிட்டு உள்ளோம்.

ஜல்லிக்கட்டுக்கு தயார் நிலையில் உள்ள நாட்டு காளைகள் சுமார் 50000 முதல், 100000 ரூபாய் வரை விலை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு பழக்கப்படாதா காளைகளை 15000 முதல் 50000 ரூபாய் வரை அதன் வயது மற்றும் எடையினை பொறுத்து விலை இருக்கும்.

விருப்ப முடைய உறவுகள் தங்கள் பெயரில் ஒரு காலையினை நீங்களே வாங்கி வளர்க்கலாம். வளர்க்க இயலாத சூழலில் நாங்கள் அமைக்க இருக்கும் "வீரத்தமிழர் முன்னணி காளை பண்ணையத்தில் கொடுத்தால்" நாங்கள் அந்த காளையை வளர்த்து ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்துவோம்.

வரும் தைமாதத்திற்குள் 30 மாடுகள் நமது கைவசம் இருந்தால் எந்த தடை வந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்தலாம்.

ஹிப்ஹாப் தமிழன் சொன்னது போல "மாடு வச்சுருக்கிறவன் மாட்ட வித்துட்டு டெல்லிக்கு போகக்கூட முடியாது. இந்த நிகையில் எப்படி உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்த போறான்" என்பதுதான் எதார்த்தம். இங்க இருக்கிற ஜல்லிக்கட்டு மாநில தலைவர் பொன்னார் சொன்னாரு என்று படுத்துட்டாரு. ஆனா இதே ஆந்திராவில் தடைவிதித்து இருந்த போதும் தான் வளர்த்த 54 மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டை நடத்தி காட்டினான் ஆந்திரா எம்.பி...

எனவே மாடு நம்மவர்கிட்ட இருந்தா போதும். கட்டாயம் ஜல்லிக்கட்டை நடத்தலாம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருக்கு. மாவட்டத்திற்கு ஒரு மட்டை வாங்கி வளர்த்தால் கட்டாயம் வருகின்ற ஆண்டில் ஜல்லிக்கட்டை நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி நடத்தும்.

Share this

0 Comment to "தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வழி என்ன ?"

Post a Comment